Monday, March 30, 2009

சுடுகாட்டு நாயின் கதை.


ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஓன்றை அது கவ்விக்கொண்டு வந்த்து அதை வாயிலிட்டு பற்களால் பலமுறை கடித்துப் பார்த்த்து எலும்பு நாயின் வாயில் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்த்து இரத்தம் தோய்ந்த அவ் வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்த்து எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு ஓகோ கடிக்க்க் கடிக்க எலும்பினுள்ளிருந்து இரத்தம் வருகிறது,என்று நினைத்து,அவ்விரத்த்தை நக்கிக் குடித்த்து மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிக பிரயாசையோடு கடித்த்து தன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. மிண்டும் நாய் எலும்பை கீழே போட்டு இரத்த்தை குடிப்பதும் மீண்டும் எலும்பை கடிப்பதுமாகவேலை செய்து கொண்டிருந்த்து உன்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை,தன்வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை.

இதுபோலவே,மனிதன் வெளிப் பொருள்களை அனுபவிக்கும் போது தன்னுள்ளுள்ள சுகத்தையே சிறிது பெருகிறான் ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாக்க் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்துகொள்கிறான் அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல மீண்டும் மீண்டும் வெளிப் பொருள்களைத் தேடுவதிலேயே அதற்காக உழைப்பதிலேயே, வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்!. அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது ? கணக்கற்ற

துன்பக் குவியலும், பகைவுணர்வுகளுமே மிச்சம்!, இதுவே அறியாமை அல்லது மாயை,!!

உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து தற்கால அணு வாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம்.அறிவுத்துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுக ளெல்லாம்,திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற் றல்லவா ஓளிக்காமல் சொல்லப்பட்டால் உண்மை இதுவே ஏனெனில் வெளிப் பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வெறென்ன நிகழ்திருக்கிறது சொல் உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது சுகம் வெளிப் பொருள்களிருந்து வருகிறது என்ற தப்புக் கொள்கையே தான் வேறொன்று மில்லை எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்ற எண்ணிய நாய்க்கும் இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப் பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ட்சி முன்னேற்றத் தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறு சொல் ஓன்றுமேயில்லை யன்றோ.

1 comment:

mukundan said...

வார்த்தையின் நளினமும் சென்ன விதமும் அற்புதம். வரவேற்க தக்கது.

Post a Comment